ADDED : ஜூன் 06, 2024 05:28 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்ட கிராமங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், மக்கள் நீதிமன்றம், சமரசத் தீர்வு மையம் ஆகியவற்றின் பயன்கள் குறித்து 2 நாள் விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்க விழா ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
மாவட்ட சட்டப் பணியை ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் கொடியசைத்து வாகன ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மேலும் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். விழாவில் மக்கள் நீதிமன்ற நீதிபதி திலகம், ஆணைக்குழு செயலர் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி பிரித்தா, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.