ADDED : ஆக 06, 2024 04:20 AM
தரவு பகுப்பாய்வு கருத்தரங்கம்
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் தரவு பகுப்பாய்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். மாணவி ஜெயஸ்ரீ வரவேற்றார். கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறைத் துணைப் பேராசிரியர் சரவணன் டேட்டா அனலிட்டிக்ஸ் என்ற தலைப்பில் பேசினார். மாணவி சுபத்ராதேவி நன்றி கூறினார். கணினி அறிவியல் துறை மாணவர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.