ADDED : ஜூன் 11, 2024 07:23 AM
விருதுநகர் : மஸ்துார் சங்கத்தினர் கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த கோரிக்கை மனு:
கொசு ஒழிப்பு மஸ்துாராக 15 ஆண்டுகளாக பணியாற்றிய பலருக்கு தற்போது எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் இம்மாதம் பணி வழங்கப்படவில்லை. இதனால் பொருளாதாரத்திலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருதி தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.