Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடியிருப்புகளுக்கு மத்தியில் தொடரும் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

குடியிருப்புகளுக்கு மத்தியில் தொடரும் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

குடியிருப்புகளுக்கு மத்தியில் தொடரும் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

குடியிருப்புகளுக்கு மத்தியில் தொடரும் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

ADDED : ஜூலை 16, 2024 04:01 AM


Google News
சிவகாசி, ; சிவகாசி பகுதியில் வீடுகளிலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இது தவிர 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன. இந்நிலையில் சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும், குடியிருப்பு பகுதிகளில் தகர செட் அமைத்தும் சட்ட விரோதமாகவும் சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர்.

இங்கு எந்தவித பாதுகாப்பு விதிகளும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. பட்டாசு தயாரிப்பது மட்டுமே முக்கிய நோக்கமாக இருக்கும். இதுபோன்று சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க வரும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகமாக கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை.

கடந்த காலங்களில் சாத்துார் அருகே அச்சன்குளம் பட்டாசு கடையில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்த போது, ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சமீபத்திலும் சாத்துாரில் வீட்டில் பட்டாசு தயாரித்த ஒருவர் வெடி விபத்தில் உயிரிழந்தார். நேற்று முன்தினம் திருத்தங்கல் பெரியார் காலனியில் குடியிருப்பு பகுதியில் அட்டை தயாரிக்க அனுமதி பெற்று இடத்தில் சட்ட விரோதமாக 40 கிலோ மணி மருந்து பதுக்கி பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டது.

இங்கு எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். குடியிருப்புப் பகுதிகளில் வெடி விபத்து ஏற்பட்டால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிந்து இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீதும் பட்டாசுகளை பதுக்குபவர்கள் மீதும் போலீசார், வருவாய்த்துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், விதிமீறல் தொடர் கதையாகவே உள்ளது. எனவே இதுபோன்று விதிமீறி பட்டாசு தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us