/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாசாணம் கோவில் திருவிழா ஆண்களுக்கு அசைவ விருந்து மாசாணம் கோவில் திருவிழா ஆண்களுக்கு அசைவ விருந்து
மாசாணம் கோவில் திருவிழா ஆண்களுக்கு அசைவ விருந்து
மாசாணம் கோவில் திருவிழா ஆண்களுக்கு அசைவ விருந்து
மாசாணம் கோவில் திருவிழா ஆண்களுக்கு அசைவ விருந்து
ADDED : ஜூன் 13, 2024 02:34 AM

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மறையூரில் மாசாணம் சுவாமி கோவில் வைகாசி திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ விருந்து நடந்தது.
இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அதிகாலை 12:00 மணிக்கு கப்பரை பூஜை நடந்தது. மறையூர் மந்தையம்மன் கோவிலிலிருந்து புறப்பட்ட மாசாணம் சுவாமி, அரியசாமி, வீரபத்திர சுவாமி கோவில் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பல்வேறு வேண்டுதல்களுக்காக நேர்த்திக் கடனுக்காக விடப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள், கோழிகளை பலியிட்டு சமைத்து, விருந்து நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு துவங்கி சூரிய உதயத்திற்கு முன், காலை 6:00 மணிக்குள் அன்னதானத்தை முடித்து விட்டனர்.
இந்த அன்னதானத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். அன்னதானத்தில் மிஞ்சிய கறி, சோறை பள்ளம் தோண்டி, கொட்டிப் புதைத்து விடுவது வழக்கம். அதன்படி நேற்றும் செய்தனர். நேற்றைய விருந்தில் சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.