பிரச்னை
அருப்புக்கோட்டை எல்லையில், விருதுநகர் - அருப்புக்கோட்டை ரோடு வழியாக வரும் வாகனங்கள் நகருக்குள் வராமல் புறவழிச் சாலையை பயன்படுத்தி சுக்கிலத்தம் ரோடு வழியாக செல்லலாம். இந்த ரோடு முடிவடைந்த நிலையில் ஒரு சிறு பகுதி மட்டும் தார் ரோடு இல்லாமல் உள்ளது.
தீர்வு
புறவழி சாலை பணிகள் விரைவில் முடிவடைந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து புறவழிச் சாலையை பயன்படுத்தி திருச்செந்தூர், ராமநாதபுரம் ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அருப்புக்கோட்டை நகருக்குள் வராமலேயே செல்ல முடியும்.
மந்தகதியில் பணிகள்
ராம்பாண்டியன், சமூக ஆர்வலர்: அருப்புக்கோட்டை புறவழிச் சாலை அமைக்கும் பணி ஆண்டு கணக்கில்இழுத்து செல்வதுடன், கோபாலபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெறாமல் உள்ளது.புறவழிச் சாலையை சுற்றி 10க்கும் அதிகமான சிறு குளங்கள், கண்மாய்கள், தண்ணீர் செல்லும் ஓடைகள் சாலையை கடந்து தான் வருகிறது.
போக்குவரத்துநெரிசல் குறையும்
சித்தநாதன், தனியார் ஊழியர்: அருப்புக்கோட்டைக்கு புறவழிச்சாலை அவசியமாக தேவைப்படுகிறது. நகரில் தினமும் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். வெளியூரில்இருந்து வரும் வாகனங்கள்நகருக்குள் வராமல் புறவழிச் சாலையை பயன்படுத்தி செல்ல முடியும். கனரக வாகனங்களுக்கும் வசதியாக இருக்கும். மந்தகதியில் நடக்கும் சாலை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.