ADDED : ஜூலை 18, 2024 04:01 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு போதை இல்லா சமுதாயம் உருவாக்குவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். பேராசிரியர் செந்தில் குமார், உடற்கல்வி இயக்குனர் ஹரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் பொன்னையா வரவேற்றார்.
டாக்டர் மினிபாபு ரத்தினேஷ் போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் அதை தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.