Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விளைநிலங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நவீன வாகனத்தில் தனி குழுக்கள் ரோந்து

விளைநிலங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நவீன வாகனத்தில் தனி குழுக்கள் ரோந்து

விளைநிலங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நவீன வாகனத்தில் தனி குழுக்கள் ரோந்து

விளைநிலங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நவீன வாகனத்தில் தனி குழுக்கள் ரோந்து

ADDED : ஜூலை 17, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீவில்லிபுத்துார் : ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விளைநிலங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2 அதிநவீன வாகனங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கடந்த சில மாதங்களாக யானைகள் வந்து விளைபொருட்களை சேதப்படுத்தி வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் கூறுகையில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ,வத்திராயிருப்பு மலையடிவார வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகள் , பன்றி , மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க வனத்துறை சார்பில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக வனவிலங்குகளை விரட்டக்கூடிய உபகரணங்கள் பொருத்தப்பட்ட நவீன வாகனங்கள் வழங்கப்பட்டு அதில் 4 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகளை காட்டுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட உள்ளனர். இக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மலை அடிவாரப் பகுதியில் பணியாற்ற உள்ளனர்.

மேலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்தால் அதற்குரிய நிவாரணம் பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் சேதத்திற்கு உரிய நிவாரணம் துரிதமாக வழங்கப்படும். வனச்சரக அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாவட்டத்தின் பிற இடங்களில் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு கிடந்தால் அதனை மீட்டு சிகிச்சை அளித்து வனத்தின் உட்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டு வருகிறது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us