/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புதர் மண்டிய கால்வாய், நாய்கள் தொல்லை புதர் மண்டிய கால்வாய், நாய்கள் தொல்லை
புதர் மண்டிய கால்வாய், நாய்கள் தொல்லை
புதர் மண்டிய கால்வாய், நாய்கள் தொல்லை
புதர் மண்டிய கால்வாய், நாய்கள் தொல்லை
கழிவுநீர் தேக்கம்
குரு பாக்கியம், குடியிருப்பாளர்: துாய்மை பணியாளர்கள் வீட்டில் சேரும் கழிவுகளை வாங்குவதுடன் வாறுகால்களில் அடைத்துள்ள கழிவுகள் அகற்றாமல் செல்கின்றனர். தகுந்த இடைவெளிகளில் இவற்றை அகற்றி கொசு மருந்து பணிகள் மேற்கொண்டு சுகாதார கேட்டினை தவிர்க்க வேண்டும்.
பணிகள் சரியில்லை
தமிழ்ச்செல்வி, குடியிருப்பாளர்: தற்போது வரை பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் இணைப்பு பணி முறையாக நடக்கவில்லை. கழிவுநீர் வெளியேறுவதற்கு பதில் மழை நேரங்களில் வீடுகளுக்குள்துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. தீர்வு காண வேண்டும்.
தெரு பணி தொடங்குங்க
விஸ்வகுமார், குடியிருப்பாளர்: 20 சந்து தெருக்களில் 9 மட்டும் புதிதாகஅமைத்துள்ளனர். மற்ற பகுதிகளில் ரோடு பெயர்ந்து ஜல்லி கற்கள் வெளியேறி உள்ளதால் டூவீலரில் செல்பவர்கள், பாதசாரிகளுக்கு மேடு பள்ளம் தெரியாமல் வாகனங்களில் நிலை தடுமாறி மக்கள் பாதிக்கின்றனர்.
புதிய பாலம் வேண்டும்
சீதாலட்சுமி, குடியிருப்பாளர்: சங்கரன்கோவில் ரோடு முகில் வண்ணம் பிள்ளை இணைப்பு பாலம் ரோடு உயர்வால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி பகுதியாக மாறிவிட்டது. பாலத்தடுப்பு கம்பிகள் சேதமடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. பாலம் கீழ் கழிவு நீர் அடைப்பதால் புதிதாக அமைக்க வேண்டும்.
நடவடிக்கைஎடுக்கப்படும்
அருள் உதயா, கவுன்சிலர்:புதிய பாலத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து குறை மின் அழுத்த பிரச்சனை சரிபடுத்தப்பட்டது.