/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செப்பனிடாத ரோடு, துர்நாற்றம், நாய்கள் தொல்லை செப்பனிடாத ரோடு, துர்நாற்றம், நாய்கள் தொல்லை
செப்பனிடாத ரோடு, துர்நாற்றம், நாய்கள் தொல்லை
செப்பனிடாத ரோடு, துர்நாற்றம், நாய்கள் தொல்லை
செப்பனிடாத ரோடு, துர்நாற்றம், நாய்கள் தொல்லை
விடுபட்ட தெருக்கள்
சரவணன், குடியிருப்பாளர்: கிருஷ்ணசாமி தெரு, மாடசாமி தெரு, சங்கர் ராஜா தெரு உள்ளிட்ட நான்கு தெருக்களுக்கு குடிநீர் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு புதிய ரோடு பணிகள் தொடங்காமல் வைத்துள்ளனர். இதனால் மேடு பள்ளங்களில் வாகனங்கள் சென்று பாதிப்பு ஏற்படுவதோடு வயோதிகர்கள் விழுந்து தடுமாறுகின்றனர்.
பாராக மாறிய ஊரணி
முருகேசன், குடியிருப்பாளர்: ரூ.1 கோடி வரை செலவிட்டு நகரில் சுகாதாரமாக வைத்துள்ள ஊரணியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. பகலில் திறந்தவெளி பார் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தட்டிக்கேட்டால் சமுதாயப் பிரச்சினையாக மாற்றுகின்றனர். சுற்றிலும் வேலி அமைத்தும் பூட்டி பாதுகாக்க ஏற்பாடு செய்யவில்லை.
குடியி ருப்புகளி ல் துர்நாற்றம்
அஜந்தா, குடியிருப்பாளர்: குடியிருப்பு நுழைவு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை நுண் உரக்கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் மூச்சை அடைக்கும் வகையில் பாதிப்பு குறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
நாய்கள் பெருக்கம்
லட்சுமணன், குடியிருப்பாளர்: சுற்றிக் கண்மாய்கள் அமைந்துள்ளதால் பராமரிப்பற்ற நாய்கள் பெருகி உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நாய்களை கட்டுப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் கிடப்பில் உள்ளது. கூட்டமாக திரிவதுடன் இரவு நேரங்களில் ஊளையிட்டபடியும் தனியாக வருபவர்களை விரட்டுகிறது.
பாரபட்சம் பார்க்கிறாங்க
ராதா, கவுன்சிலர்: விடுபட்ட சாலை பணிகளின் கோரிக்கையில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் பார்க்கின்றனர்.