Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆதார் சேவைகள்; தபால் நிலையங்களில் வழங்கல்

ஆதார் சேவைகள்; தபால் நிலையங்களில் வழங்கல்

ஆதார் சேவைகள்; தபால் நிலையங்களில் வழங்கல்

ஆதார் சேவைகள்; தபால் நிலையங்களில் வழங்கல்

ADDED : ஜூன் 04, 2025 12:39 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு:

விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் தலைமை தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவை நேரம் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படுகிறது. இச்சேவையை பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள், மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆதார் சேவைகள் தேவைபட்டால் 95007 78877 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அருப்புக்கோட்டை கிழக்கு, சத்திரப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, கல்குறிச்சி, காரியாபட்டி, கல்லுாரணி, கே.ஆர்., நகர், எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணர், மொஹமத்சாகிப்புரம், முகவூர், பாலவநத்தம், பரளச்சி, பந்தல்குடி, ராமசாமி ராஜா நகர், சாத்துார், சேத்துார், சிவகாசி மேற்கு, ஸ்ரீவில்லிப்புத்துார், டி.என்.சி., ஆலங்குளம், திருச்சுழி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு உள்ளிட்ட துணை அஞ்சல் அலுவலகங்களில் வேலை நேரங்களில் ஆதார் சேவைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us