ADDED : மே 23, 2025 12:10 AM
நரிக்குடி: நரிக்குடி கிழவிகுளத்தில் மரத்தில் விஷ கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தன. அப்பகுதியில் நடமாடுவோர், குடியிருப்பவர்களை அவ்வப்போது விரட்டி கடித்தது.
இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட அச்சம் அடைந்தனர். திருச்சுழி தீயணைப்பு வீரர்கள் மரங்களில் இருந்த விஷ கதம்ப வண்டுகளை தீப்பந்தங்களில் தீயிட்டு, கொளுத்தி அளித்தனர்.