போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த கருநாகம்
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த கருநாகம்
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த கருநாகம்
ADDED : ஜூன் 08, 2025 11:18 PM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த கருநாகத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
பிளவக்கல் அணைக்கு செல்லும் ரோட்டில் கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதனை சுற்றி ஏராளமான வயல் நிலங்கள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு மேல் 4 அடி நீள கரு நாகம் ஒன்று போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர், போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த கருநாகத்தை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.