ADDED : பிப் 25, 2024 06:00 AM
விருதுநகர், பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் கலா 52. இவருடைய மகன் சங்கர் கணேஷ் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதை தட்டி கேட்ட தாய் கலாவை பிப். 23 அதிகாலை 5:00 மணிக்கு சங்கர் கணேஷ் தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.