Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு

ADDED : அக் 24, 2025 02:22 AM


Google News
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய குன்னூர் ஊராட்சியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் ரூ.8.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் வளர்ப்பதை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இதுவரை இணையவழி பட்டா கிடைக்காத 9 குடும்பங்களுக்கு பட்டாக்களை நேரில் வழங்கினார்.

கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார். ஆய்வின் போது தாசில்தார் ஆண்டாள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us