Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்

வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்

வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்

வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்

ADDED : அக் 02, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ஒன்பதாம் நாளில் செப்பு தேரோட்டம் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:40 மணிக்கு பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி செப்பு தேருக்கு எழுந்தருளினர். அங்கு ஹரிஷ் பட்டர் சிறப்பு பூஜை செய்தார்.

பின்னர் காலை 7:40 மணிக்கு கோவிந்தா, கோபாலா கோசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

கோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us