விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கூரைக்குண்டு ஊராட்சியில் நுாறு வேலை நாள் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பூங்கோதை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், லட்சுமி, நகர் செயலாளர் ஜெயபாரத் உள்பட பலர் பங்கேற்றனர்.