Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிலத்தை நடவுக்காக உழுதுதயார்படுத்தும் விவசாயிகள்

நிலத்தை நடவுக்காக உழுதுதயார்படுத்தும் விவசாயிகள்

நிலத்தை நடவுக்காக உழுதுதயார்படுத்தும் விவசாயிகள்

நிலத்தை நடவுக்காக உழுதுதயார்படுத்தும் விவசாயிகள்

ADDED : அக் 12, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
விருதுநகர் : மாவட்டத்தில் பரவலாக கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் மானாவாரி பயிர்கள் நடவு செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலையில் வெயில், மாலையில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பகல் நேர வெப்பநிலை மாலையில் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகிறது.

மக்காச்சோளம், கம்பு, திணை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை நடவு செய்வதற்காக வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு விவசாயிகள் நிலத்தை தயார் செய்வது வழக்கம்.

மழையால் கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து விட்டால் புதர்செடிகள், களைகள் அகற்றுவது கடினமாக மாறிவிடும்.

மேலும் விவசாயப்பணிகளுக்கு வாகனங்களை ஈடுபடுத்துவதும், அதற்கான நேரகட்டணங்களும் அதிகரிக்கும். இதனால் அனைத்து பகுதிகளிலும் தற்போது பெய்யும் மாலை நேர மழை நம்பி மானாவாரி பயிர்களை நடவு செய்வதற்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பயிர்ககளை நடவு செய்தால் டிசம்பர் இறுதி துவங்கி ஜனவரி வரை அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெறும். எனவே பருவமழை விரைவில் துவங்க உள்ளதால் விவசாயிகள் மானாவாரி பயிர்களை நடவு செய்வதற்காக நிலத்தை தயார்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us