Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு 20 ஆண்டு சிறை

ADDED : அக் 24, 2025 03:36 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பெரியசாமி 37, கூலித்தொழிலாளி. எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட இவர் நெருங்கிய உறவினரான 14 வயது சிறுமிக்கு 2023ல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் பெரியசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

இதில் பெரியசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us