ADDED : செப் 26, 2025 01:55 AM
சாத்துார்:சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்தவர் தனசேகரன், 42. சின்ன காமன் பட்டியில் உள்ள சூரிய பிரபா பட்டாசு ஆலையில் போர்மேனாக பணிபுரிந்து வந்தார். 2020 பிப்.19ல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர்.
இந்த வழக்கு சாத்துார் சப் கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணைக்கு ஆஜராகும் படி தனசேகரனுக்கு நீதிமன்றம் மூன்று முறை நோட்டீஸ் வழங்கியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சப் கோர்ட் நீதிபதி முத்து மகாராஜன் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தார். சாத்துார் போலீசார் தனசேகரனை கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர்.