ADDED : அக் 02, 2025 11:11 PM
ஸ்ரீவில்லிபுத்துார்; - ஸ்ரீவில்லிபுத்துார் தியாகராஜா மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நடந்தது.
சமுதாய தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் லட்சுமணன், செயலாளர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் துரை கண்ணன் வரவேற்றார். தலைமை ஆசிரியை செல்வராணி முகாமினை துவக்கி வைத்து பேசினார்.
கோயில் குளங்களை மாணவர்கள் சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டனர். ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார்.


