Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கோயில் எல்லையை நீதிமன்ற உத்தரவுப்படி மறுவரையறை செய்ய வேண்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கோயில் எல்லையை நீதிமன்ற உத்தரவுப்படி மறுவரையறை செய்ய வேண்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கோயில் எல்லையை நீதிமன்ற உத்தரவுப்படி மறுவரையறை செய்ய வேண்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கோயில் எல்லையை நீதிமன்ற உத்தரவுப்படி மறுவரையறை செய்ய வேண்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ADDED : செப் 26, 2025 01:56 AM


Google News
விருதுநகர்: கோயில் எல்லையை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மறுவரையறை செய்து இருக்கன்குடி ஊராட்சிக்குள் மாரியம்மன் கோயில் சர்வேயை ஒரு மாதத்திற்குள் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி தலைவர், கலெக்டர் சுகபுத்ராவிடம் மனு அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இருக்கன்குடியில் மாரியம்மன் கோயில் அதே பகுதியில் ஊராட்சி எல்லையில் உள்ளது. ஆனால் 1995ல் நத்தம்பட்டியைச் சேர்ந்த அன்றைய அதிகாரிகள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலை நத்தம்பட்டியில் சேர்த்துவிட்டனர்.

இந்த விவகாரம் இருக்கன்குடி மக்களுக்கு தெரிந்த பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கலெக்டர் உடனடியாக களஆய்வு செய்ய உத்தரவிட்டு 20 ஆண்டுகள் ஆகியும் இதுவரை களஆய்வு செய்யப்படவில்லை.

இருக்கன்குடி ஊராட்சி அனுமதியின்றி கோயிலில் ரூ.130 கோடியில் கட்டுமானப்பணிகள் நடக்கிறது. ஓட்டு மொத்தமாக கோயிலை நத்தம்பட்டிக்கு அபகரித்து கொண்டு போகும் முறைகேடுகளை கண்டும் காணாமல் ஹிந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது. கோயில் எல்லையை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மறுவரையறை செய்து இருக்கன்குடி ஊராட்சிக்குள் மாரியம்மன் கோயில் சர்வேயை ஒரு மாதத்திற்குள் கலெக்டர் சேர்க்க வேண்டும். அதே போல் அனைத்து ஜாதியினரும் அறங்காவலர் குழுவில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் அனைத்து சமூகத்தினருக்கும் அழைப்பு கொடுத்து போராட்டம் நடத்தப்படும் என கேட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us