Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தெருக்களின் நடுவில் மின்கம்பங்கள் சிரமத்தில் குடியிருப்போர்

தெருக்களின் நடுவில் மின்கம்பங்கள் சிரமத்தில் குடியிருப்போர்

தெருக்களின் நடுவில் மின்கம்பங்கள் சிரமத்தில் குடியிருப்போர்

தெருக்களின் நடுவில் மின்கம்பங்கள் சிரமத்தில் குடியிருப்போர்

ADDED : ஜூன் 15, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கிவாடன்பட்டியில் தெருக்களின் நடுவில் உள்ள மின் கம்பங்களால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் காக்கி வாடன்பட்டி கிழக்கு தெருவில் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெருவில் அனைத்து மின் கம்பங்களும் நடுரோட்டில் உள்ளது. இதனால் டூவீலர்களே எளிதில் செல்ல முடியவில்லை. கார் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் வருவதற்கும் வழி இல்லை. உடல்நிலை சரியில்லாதவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆட்டோ கூட தெருவிற்குள் வர முடியவில்லை.

மேலும் ஏதேனும் இறப்பு நேரிடும் போது உடலைக் கொண்டு செல்வதற்கும் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர இப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது பெரிய வாகனங்களில் கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது. இதனால் கட்டுமான பொருட்களை மெயின் ரோட்டிலேயே இறக்கி அங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே இப்பகுதியில் நடுரோட்டில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us