Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அலைபேசி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

அலைபேசி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

அலைபேசி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

அலைபேசி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

ADDED : ஜன 05, 2024 12:48 AM


Google News
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் மருது கணேஷ் 14, அதிக நேரம் அலைபேசி பார்ப்பதை தாயார் கலையரசி 39, கண்டித்ததால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த மதுரை வீரன் மனைவி கலையரசி. தனியார் பள்ளி ஆசிரியை. இத்தம்பதியின் மகன் மருதுகணேஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் அதிக நேரம் மருது கணேஷ் அலைபேசியை பார்த்து வந்ததை தாயார் கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை மாணவர் மருது கணேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us