Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்

ADDED : ஜூன் 08, 2025 11:19 PM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறானாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்புறம், ஊரகப் பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் 182 முன்களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்புப் பணி வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us