Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது

கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது

கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது

கோவையில் கடத்திய கார் ஸ்ரீவி.,யில் பிடிப்பட்டது

ADDED : பிப் 01, 2024 05:18 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர : கோவையில் இருந்து கடத்தி வரப்பட்ட காரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

கோவை காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தனுஷ் ராஜ், 32, இவரது எரேடிகா மாடல் கார் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி குறிஞ்சி ஹோட்டல் பகுதியில் நீண்ட நேரமாக நிற்பதை, தனது அலைபேசி ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்டறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் இரவு ரோந்து சென்ற வன்னியம்பட்டி போலீசார், காரை ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.

காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த பீமாராவ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us