ADDED : செப் 26, 2025 01:57 AM
விருதுநகர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள கடுமையான பணிச்சுமைகளை களைந்திடவும், முகாம்களில் பெறப்படும் அதிகப்படியான மனுக்களை முடிவு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம், நிதி ஒதுக்கீடு கோரியும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை முழுமையாக
புறக்கணித்து அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மதியம் 3:00 மணி முதல் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டக்கிளை ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. 152 பேர் பங்கேற்றனர். சாத்துார் தாலுகா அலுவலகத்திலும் நடந்தது.