Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விடுபட்ட அனைத்து அரசு பஸ்களிலும் கதவுகள் பொருத்தும் பணி எப்போது

விடுபட்ட அனைத்து அரசு பஸ்களிலும் கதவுகள் பொருத்தும் பணி எப்போது

விடுபட்ட அனைத்து அரசு பஸ்களிலும் கதவுகள் பொருத்தும் பணி எப்போது

விடுபட்ட அனைத்து அரசு பஸ்களிலும் கதவுகள் பொருத்தும் பணி எப்போது

ADDED : அக் 13, 2025 05:48 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் கதவுகள் பொருத்தும் பணிகளை முழுமையாக முடிக்கப்படாததால் கூட்டம் அதிகமான நேரங்களில் பயணிகள் ஆபத்தான படிக்கட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை நீடிக்கிறது. அனைத்து அரசு கிளை டெப்போக்களிலும் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் 462 பஸ்கள் உள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அரசு பஸ்களுக்கும் படிக்கட்டில் கதவுகள் அமைக்கும் பணிகள் 8 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இந்த கதவுகள் ஏர்லாக் முறையில் இயங்குவதால் அதற்கு தேவையான பணிகளை மட்டும் பணிமனை ஊழியர்கள் செய்து கொடுத்தனர். தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெடிமேட் கதவுகளை அந்தந்த பணிமனைகளில் கதவுகள் இல்லாத அரசு பஸ்களுக்கு பொருத்தும் பணிகள் நடந்தது.

ஆனால் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் ஒரு பணிமனைக்கு 5 முதல் 10 பஸ்கள் என மொத்தம் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் 60க்கும் மேற்பட்ட பஸ்களில் கதவுகள் இதுவரை பொருத்தப்படாமல் தினசரி இயக்கப் படுகிறது.

பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணத்தை செய்யும் நிலை நீடிக்கிறது. எனவே மாவட்டத்தில் விடுப்பட்ட அனைத்து அரசு பஸ்களிலும் கதவுகள் பொருத்தும் பணியை உடனடியாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us