ADDED : செப் 26, 2025 01:52 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் நேற்று உலக மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு ஆரோக்கியத்தைப் பற்றி சிந்தியுங்கள் என்ற நோயாளிகளுக்கான விழிப்புணர்வு மருந்து கோடவுன் அலுவலர் அரசு தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் தலைமை மருந்தாளுனர் செந்துார்நாதன் உட்பட மருந்தாளுனர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். இனிப்புகளும் வழங்கப்பட்டது. இதே போல மாவட்டத்தில் உள்ள தலைமை, அனைத்து தாலுகா அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மருந்தாளுனர் தினவிழா நடந்தது.