Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தகராறில் இளைஞர் கொலை: நால்வரிடம் விசாரணை

தகராறில் இளைஞர் கொலை: நால்வரிடம் விசாரணை

தகராறில் இளைஞர் கொலை: நால்வரிடம் விசாரணை

தகராறில் இளைஞர் கொலை: நால்வரிடம் விசாரணை

ADDED : அக் 22, 2025 07:56 PM


Google News
சேத்துார்: விருதுநகர் மாவட்டம் சேத்துார் அருகே நடந்த தகராறில் சிகிச்சை எடுக்காமல் வீட்டில் துாங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து கொலை வழக்கில் நால்வரிடம் விசாரணை நடக்கிறது.

சேத்துார் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் 21. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் 52, என்பவருக்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சேத்துார் டாஸ்மாக் பார் அருகே குடிபோதையில் தகராறு ஏற்பட்டு பரமசிவம், மகன் வேல்முருகன் ஆகியோர் வசந்த குமாரை கத்தியால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு வசந்தகுமார் தாக்கியதில் பரமசிவத்திற்கு கையில் ரத்த காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வசந்தகுமார் சிகிச்சைக்கு செல்லாமல் தலையில் காயத்துடன் வீட்டிற்கு சென்று விட்டார்.

நீண்ட நேரம் வீடு திறக்கப்படாதது குறித்து நேற்று மாலை உறவினர்கள் சென்று பார்த்தபோது வசந்தகுமார் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து கொலை தொடர்பாக பரமசிவம், வேல்முருகன், சம்பவத்தின்போது உடனிருந்த மாசாணம், ஜான் பாண்டியன் ஆகியோரிடம் சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us