Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்

ADDED : ஜூன் 12, 2024 12:45 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ஜூன் 20ம் தேதி துவங்கி, ஜூன் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ல் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், சட்டசபை கூட்டத் தொடரை, முன்னதாகவே ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தை கூட்டுவது, ஒவ்வொரு நாளும் எந்த துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஜூன் 20ம் தேதி துவங்கி, ஜூன் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மேலும், இம்முறை காலை 9.30 மணிக்கே அவை நடவடிக்கை துவங்கும். காலை மற்றும் மாலை இரு அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெறும் என அப்பாவு கூறியுள்ளார்.

பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட், இன்று எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us