Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

ADDED : ஜன 01, 2024 04:34 AM


Google News
சென்னை : சென்னை, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த சிவகுமார் மகன் பிரகாஷ், 20; கார் ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம், நண்பர்கள் மூவருடன், அக்கரை கடலில் குளித்துள்ளார். அப்போது பிரகாஷ், அலையில் சிக்கி, கடலில் மாயமானார்.

பெருங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல், 24; காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று, கடை ஊழியர்களுடன், பாலவாக்கம் கடலில் குளித்தார்.

அப்போது, சக்திவேல் அலையில் சிக்கி கடலில் மாயமானார். நீலாங்கரை போலீசார், மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் உதவியுடன், இருவரையும் தேடுகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 26; ஓ.எம்.ஆரில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று, நண்பர்களுடன் நீலாங்கரை கடலில் குளித்தார்.

அப்போது, அலையில் சிக்கி உயிருக்கு போராடினார். மீனவர்கள் உதவியுடன், நீலாங்கரை போலீசார், சீனிவாசனை மீட்டனர். இதனால், சீனிவாசன் தப்பினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us