Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கல்லால் அடித்து கொலை: கைது 3

கல்லால் அடித்து கொலை: கைது 3

கல்லால் அடித்து கொலை: கைது 3

கல்லால் அடித்து கொலை: கைது 3

ADDED : ஜன 15, 2024 02:33 AM


Google News
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குடிபோதை தகராறில் கல்லால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டார். 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு கோட்டியப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி என்ற கண்ணன் 55, சாட்டுபத்துவை சேர்ந்த மாடக்கண்ணு 44, இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் மாடக்கண்ணு, நண்பர்கள் கல்லிடைக்குறிச்சி முத்துப்பாண்டியன் 30, அருள் 27, சேர்ந்து கண்ணனை கல்லால் அடித்து தாக்கினர். இதில் அவர் இறந்தார். அம்பாசமுத்திரம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us