Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் உள்பட 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ADDED : அக் 09, 2025 08:17 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல, இலங்கையின் நெடுந்தீவு மேற்கு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 17 பேரையும் நேற்றிரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மொத்தம் 47 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us