Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்

ADDED : ஜூன் 10, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
பாளையங்கோட்டை: திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில், தி.மு.க., மாநில நிர்வாகி உட்பட ஏழு பேருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில், பிப்., 23ல், தி.மு.க., மாநில பொறியாளர் அணி துணைச்செயலர் ராஜவர்மன் உட்பட ஏழு பேர், ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். மேலும், ஹிந்திக்கு எதிராக கோஷமிட்டனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர். நீதிபதி வழக்கை விசாரித்து, ஏழு பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஏழு பேரும் தலா, 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us