Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆற்று வெள்ளத்தில் 300 மீட்டர் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

ஆற்று வெள்ளத்தில் 300 மீட்டர் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

ஆற்று வெள்ளத்தில் 300 மீட்டர் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

ஆற்று வெள்ளத்தில் 300 மீட்டர் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

ADDED : ஜூன் 28, 2024 12:49 PM


Google News
Latest Tamil News
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி அருகே, ஆற்றைக் கடக்க முயன்ற காட்டு யானை, மழை வெள்ளத்தில் 300 மீட்டர் அடித்து செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபியது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக, தொடர்ந்து, மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடரும் மழையினால், இங்கு உற்பத்தியாகும் பாண்டியார் - புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று, காலை ஓவேலி, தர்மபுரி பகுதி வனப்பகுதி வழியாக செல்லும், ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், நான்கு காட்டு யானைகள் ஆற்றைக் கடந்து சென்றது. அதில் ஒரு பெண் யானை, திடீரென நிலை தடுமாறி மாற்று வழக்கில் அடித்து செல்லப்பட்டது.

அந்த யானை ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி தத்தளித்தது. சுமார் 300 மீட்டர் தூரம் வரை அடுத்து செல்லப்பட்ட யானை, சுய முயற்சியால் நீந்தி ஆற்றின் கரைக்கு சென்று உயிர்த்தப்பியது. பதட்டத்துடன், இந்நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள், யானை உயிர் தப்பிப்பது தொடர்ந்து நிம்மதி அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us