திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு
திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு
திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு

குடைச்சல்
கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வயிற்று எரிச்சல்
நாட்டில் முதன்முறையாக மாநில கட்சி ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியது நாம் தான். 74 ஆண்டுகால வரலாறு நமக்கு உள்ளது. எத்தனையோ பேர் திமுகவை அழிப்போம் என்றனர்.
வெட்கக்கேடு
எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி கொண்டு உள்ளார். கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் இபிஎஸ் தரத்தை மக்கள் தெளிவாக எடை போடுவார்கள் என நானும் விட்டுவிட்டேன். ரெய்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அதிமுகவை அடகு வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்ன என கேட்டபோது அதெல்லாம் எனக்கு தெரியாது சொன்னவர், அதிமுக தலைமை பொறுப்பில் உள்ளார். இதுதான் வெட்கக்கேடு
நோ என்ட்ரி
டில்லியில் இருந்து பல நெருக்கடிகளை சந்திக்கிறோம். இங்கு அடக்குமுறைக்கு நோ என்ட்ரி தான். ஆதிக்கத்துக்கு நோ என்ட்ரி தான். திணிப்புக்கு நோ என்ட்ரி தான். மொத்தத்தில் பாஜவுக்கு நோ என்ட்ரி தான். பாஜவை தடுக்கவில்லை என்றால், மாநிலங்களே இருக்கக்கூடாது என நகர்வார்கள். காஷ்மீரில் சோதனை செய்து பார்த்துவிட்டனர். தற்போது உரிமைப்போர் நடத்தி நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது.