அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

call detail record
25ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று அதையும் நாங்கள் உங்கள் முன் வைத்தோம். எல்லா அரசியல் கட்சிகளும் போராடினார்கள்.
30 ஆண்டுகள் கடுங்காவல்
27ம் தேதி நான் ஒரு அறப்போராட்டத்தை முன் எடுத்தேன். சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து கண்காணித்தது. தற்போது 5 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. முக்கிய குற்றவாளியாக, ஒரே குற்றவாளியாக இருக்க கூடிய ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அன்றைக்கு கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்கிறோம். ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தது நம்ம எல்லோருக்கும் சந்தோஷம் தான்.
தொலைபேசி எண்
டிசம்பர் 24ம் தேதி, ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகள் கைது செய்கிறார்கள். பிறகு வெளியே விட்டு விடுகிறார்கள். 25ம் தேதி மாலை மீண்டும் கைது செய்கிறார்கள். ஏன் கைது செய்த பிறகு விடுதலை செய்தார்கள். இதில் யாரு எல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள். எதற்காக தி.மு.க.,வில் சில தலைவர்களுக்கு பதற்றம்?
இதையெல்லாம் விசாரித்தார்களா?
சம்பவம் நடந்த அன்று ஞானசேகரன் தொலைபேசி பிளேட் மோடில் இருந்ததாக அரசு வழக்கறிஞர் சொல்லி உள்ளார். 8.52 மணி வரை பிளேட் மோடில் இருந்ததை தான் சி.டி.ஆர்., சொல்கிறது.
5 முறை போனில் பேசியது எதற்கு?
48 மணி நேரம் கழித்து அரசு என்ன பதில் சொல்லும் என்பதை பார்த்து விட்டு வெளியிடுகிறேன். 6 நிமிடம் கழித்து 9.01 மணிக்கு ஞானசேகரனுக்கு மீண்டும் அந்த போலீஸ் அதிகாரி அழைக்கிறார். அந்த போலீஸ் அதிகாரி யார்? அவர் பேசியதை மறைத்தது ஏன்?
ஆதாரங்கள் அழிப்பு
டிச.,24ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் கோட்டூர்புரம் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த பிறகு, தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு போனில் பேசுகிறார். 8.32 மணிக்கு மீண்டும் இருவரும் பேசுகின்றனர். எதற்காக இவ்வளவு பதட்டம்?