Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி

ADDED : பிப் 12, 2024 06:18 AM


Google News
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 29; தேங்காய் வியாபாரி. சூளகிரி செல்ல கட்டிகானப்பள்ளியில் இருந்து, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார்.

அனாசந்திரத்தைச் சேர்ந்த பெயின்டர் திம்மராஜ், 44, பீளாளம் கிராமத்திலிருந்து, வி.மாதேப்பள்ளி கிராமத்துக்கு, 'பஜாஜ் விக்ராந்த்' பைக்கில் சென்றார். சூளகிரி - கும்பளம் சாலையில் தொட்டூர் கிராமத்தில், கங்கம்மா கோவில் அருகே மாலை, 6:30 மணிக்கு வந்தபோது, இருவரின் பைக்குகளும் நேருக்கு நேர் மோதின.

தலையில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, சூளகிரி அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us