Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை

20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை

20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை

20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை

ADDED : மார் 16, 2025 09:41 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் 20 ஆண்டுக்கும் மேலாக கொத்தடிமையாக இருந்த ஆந்திராவை சேர்ந்த 60 வயது அப்பா ராவ் மீட்கப்பட்டு உள்ளார்.

ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்

அப்பா ராவ். இவருக்கு வயது 60. இவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் தாலுகா கடம்பன்குளம் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணாதுரை என்பவரது தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்துள்ளார். சம்பளம் எதுவும் இல்லாமல், ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்துள்ளார்.

மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் தங்கள் வழக்கமான கள ஆய்வுக்கு சென்றபோது இதை கண்டறிந்து உறுதி செய்தனர். அப்பா ராவிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் ஆந்திராவிலிருந்து வந்திருப்பதும், 20 ஆண்டுக்கும் மேலாக ஊருக்கு செல்லாமல் இங்கேயே ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சிவகங்கை அதிகாரிகள், ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து, அவரது குடும்பத்தினர் குறித்து தகவல் சேகரித்தனர். விசாரணையில், அப்பா ராவ் 20 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி ஒரு கூலித் தொழிலாளர்களுடன் சென்னை வந்துள்ளார்.

அங்கிருந்து ராமநாதபுரம் செல்லும் ரயிலில் ஏறினர்.

பயணத்தின் போது, ​​ராவ் சிவகங்கை ஸ்டேஷனில் டீ சாப்பிடுவதற்கு இறங்கினார், அப்போது அவர் ரயிலைத் தவறவிட்டார். படிப்பறிவில்லாத அப்பா ராவ் அங்கேயே சுற்றித்திரிந்தார்.

அவருக்கு வேலை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, சம்பளம் எதுவும் தராமல் சாப்பாடு மட்டும் வழங்கி வந்தது தெரிய வந்துள்ளது. தப்பிக்க வழி இல்லாமல், குடும்பத்துடன் தொடர்பு இல்லாமல், ராவ் பல ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வந்துள்ளார்.

இந்தத் தகவல்களை கண்டறிந்த சிவகங்கை மாவட்ட நிர்வாகம், அப்பாவின் குடும்பத்தினரை கண்டறிய நடவடிக்கை எடுத்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 60 வயதான அப்பா ராவ், தனது மகள் சாயம்மாவை சந்தித்தார். ​​20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட தந்தையும் மகளும், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

ராவ் பட்ட கஷ்டங்களை புரிந்து கொண்ட கலெக்டர் ஆஷா அஜித், மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதி மற்றும் கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து நிவாரண நிதியில் இருந்து ரூ.3.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

நிவாரணத் தொகையை என்ன செய்யப் போகிறீர்கள் என்று அப்பாராவிடம் கேட்டபோது, ​​அதைத் தன் மனைவி சீதாம்மாவிடம் தருவதாகக் கூறினார். அதன் பிறகு தான், அவருக்கு இன்னொரு வேதனையான செய்தியும் காத்திருந்தது. அவரது மனைவி, ஐந்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக மகள் சாயம்மா வேதனையுடன் கூறினார்.

இதைக் கேட்டதும் அப்பாராவ் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைக்கண்ட அதிகாரிகளும் மிகுந்த வருத்தம் அடைந்தனர். பின்னர் அவர், அதிகாரிகளுக்கு விடை கொடுத்து சொந்த ஊருக்கு மகளுடன் புறப்பட்டார். அப்பாராவை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியஅண்ணாதுரை மீது புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us