Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!

இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!

இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!

இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!

ADDED : அக் 21, 2025 01:06 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 21) 8 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வுப் பகுதியானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 36 மணி நேரத்தில் தெற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. பின்னர், இந்த புயல் சின்னம் தமிழகம் நோக்கி நகரக்கூடும்.

இன்று அக்டோபர் 21ம் தேதி, அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்,* கடலூர்,* மயிலாடுதுறை,* நாகை,* திருவாரூர்,* தஞ்சாவூர் * புதுக்கோட்டை,* ராமநாதபுரம்

இன்று அக்டோபர் 21ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* சென்னை,* செங்கல்பட்டு,* திருவள்ளூர்,* காஞ்சிபுரம்,* கள்ளக்குறிச்சி,* பெரம்பலூர்,* அரியலூர்,* தூத்துக்குடி,* திருநெல்வேலி,* கன்னியாகுமரி

இன்று அக்டோபர் 21ம் தேதி கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தென்காசி* விருதுநகர்* மதுரை* சிவகங்கை* திருச்சி* திருவண்ணாமலை* ராணிப்பேட்டை

நாளை அக்டோபர் 22ம் தேதி, அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை* கடலூர்* விழுப்புரம்* செங்கல்பட்டு

நாளை அக்டோபர் 22ம் தேதி, மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நாகை* திருவாரூர்* புதுக்கோட்டை * அரியலூர்* பெரம்பலூர் * கள்ளக்குறிச்சி* திருவண்ணாமலை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* சென்னை* திருவள்ளூர்

நாளை அக்டோபர் 22ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* புதுக்கோட்டை* திருச்சி* சேலம்* தர்மபுரி * திருப்பத்தூர்* வேலூர்

நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி, மிக கனமழை ( ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்* சென்னை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு

நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* வேலூர்* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* விழுப்புரம்* கள்ளக்குறிச்சி * கடலூர் அக்டோபர் 24ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கோவை* நீலகிரி* ஈரோடு* சேலம்* தர்மபுரி * கிருஷ்ணகிரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us