Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது

மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது

மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது

மக்களை ஏமாற்றியது இனிமேலும் நடக்காது

ADDED : ஜூன் 15, 2025 02:59 AM


Google News
இந்தியா முழுதும் மொத்தம், 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 200 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித்தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறை திட்டங்கள் என, 5.47 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.

உண்மை இப்படி இருக்க, தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுத சொன்னால், மக்கள் நம்பி விடுவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம், இதுபோன்ற நாச்சியப்பன் கடையில், தி.மு.க., பெயரை பொறித்து, மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது. முதல்வரே உங்கள் ஏமாற்று வித்தைகளை உடனே நிறுத்துங்கள்.

- அண்ணாமலை,

முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us