'கள்' தடை நீக்க ஈஸ்வரன் வலியுறுத்தல்
'கள்' தடை நீக்க ஈஸ்வரன் வலியுறுத்தல்
'கள்' தடை நீக்க ஈஸ்வரன் வலியுறுத்தல்
ADDED : ஜன 07, 2024 11:32 PM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் அளித்த பேட்டி: பால் விலை உயர்வை காலதாமதம் செய்யாமல், உடனடியாக அமல்படுத்த வேண்டும். சிறு, குறு தொழில்கள் மேம்பட, மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
டாஸ்மாக் மது கடைகள் முழுதுமாக மூடப்பட வேண்டும். கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள் விற்பனை செய்தால், விவசாயிகள் பயன்பெற முடியும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


