Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காலையில் மகிழ்ச்சி; மதியம் அதிர்ச்சி: உச்சத்துக்கு போனது தங்கம் விலை!

காலையில் மகிழ்ச்சி; மதியம் அதிர்ச்சி: உச்சத்துக்கு போனது தங்கம் விலை!

காலையில் மகிழ்ச்சி; மதியம் அதிர்ச்சி: உச்சத்துக்கு போனது தங்கம் விலை!

காலையில் மகிழ்ச்சி; மதியம் அதிர்ச்சி: உச்சத்துக்கு போனது தங்கம் விலை!

UPDATED : செப் 08, 2025 05:33 PMADDED : செப் 08, 2025 09:57 AM


Google News
Latest Tamil News
சென்னை: இன்று காலை 280 ரூபாய் குறைந்த தங்கம் விலை, மதியம் பவுனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. ஒரு பவுன் 80 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையாகியது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,600 அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை காலை இன்று கொஞ்சம் குறைந்தது. சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனையானது. ஆனால், மதியம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கம் பவுனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. பவுன் 80 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது; கிராம் 10 ஆயிரத்து 60 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது, நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us