Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!

Latest Tamil News
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வருபவர் பாலமுருகன்(30). இந்து முன்னணியில் திருப்பூர் வடக்கு வக்கீல் பிரிவு ஒன்றிய தலைவராக உள்ளார். இது தவிர பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 25) அதிகாலை தாம் வசிக்கும் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சடலத்தை கைப்பற்றிய அவர்கள், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான முழுப்பின்னணி என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us