Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி

இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி

இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி

இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்: விமான விபத்து குறித்து ரஜினி வேதனை பேட்டி

ADDED : ஜூன் 17, 2025 10:32 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''ரொம்ப வருத்தமான விஷயம். ஆண்டவன் அருளால் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாதுனு வேண்டிக்குறேன்'' என ஆமதாபாத் விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

குஜராத்தின், ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகியும், சிதைந்தும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக, டி.என்.ஏ., எனப்படும் மரபணு மாதிரி எடுக்கப்பட்டது.

அடையாளம்

விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்தவர்கள் என, 250 பேரின் உறவினர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில், 99 பேரின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், 64 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ன.

வருத்தமாக இருக்கிறது

இந்நிலையில், இன்று (ஜூன் 17) சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினி கூறியதாவது: ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம். ரொம்ப மிக மிக வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனி அப்படி நடக்கக் கூடாதுனு வேண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us