Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

ADDED : ஜூன் 15, 2025 07:04 PM


Google News
Latest Tamil News
தஞ்சை: காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் 2 நாட்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணை வந்து சேர்ந்தது.

இந் நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின் சாலை மார்க்கமாக கல்லணை சென்றார். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அவர் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை சென்றார். பின்னர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ., தூரம் சாலை வழியாக மக்களை சந்தித்தபடியே நடந்து சென்றார். அங்கு மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us