கோயம்பேடில் களேபரம் :ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் செல்ல நிர்பந்தித்ததால் அவதி
கோயம்பேடில் களேபரம் :ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் செல்ல நிர்பந்தித்ததால் அவதி
கோயம்பேடில் களேபரம் :ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கம் செல்ல நிர்பந்தித்ததால் அவதி

குழப்பமான சூழலில் அவதி
இது குறித்து, முன்பதிவு செய்த பயணியர் சிலர் கூறியதாவது: ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை. இங்கு வந்த போது கிளாம்பாக்கத்திற்கு செல்லும்படி போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆம்னி பேருந்து தரப்பில் முன்கூட்டியே தகவல் எதுவும் கூறவில்லை. சில ஆம்னி பேருந்து நிறுவனத்தினர், கோயம்பேடில் வந்து ஏறிக்கொள்ளும் படி கூறினர். ஆனால், கோயம்பேடு வந்த போது, ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த குழப்பத்தில் என்ன செய்வதென தெரியாமல் கடுமையாக அவதிப்படுகிறோம்.
சட்டப்படி நடவடிக்கை
இதற்கிடையே, தமிழக போக்குவரத்து ஆணையர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஜன., 24 இரவு முதல் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி இ.சி.ஆர். சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் புதிய நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
முரண்டு பிடிக்கக் கூடாது
இந்தியாவில் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக கிளாம்பாக்கம் முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கும், பயணியருக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயம்பேடில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு ஜன., 24ம் தேதி முதல் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றார் போல், அரசு செயல்பட முடியாது. மக்களுடைய தேவைகளுக்கும், விருப்பத்துக்கும் தான் அரசு செயல்பட முடியும். கிளாம்பாக்கம் முனையம் திறக்கப்படுவதற்கு முன்பே, இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு கூட்டம் நடத்தி தகுந்த அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். கடந்த மாதம் 30ம் தேதி முதலே அங்கிருந்து தான் ஆம்னி பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டிருக்க வேண்டும். மீண்டும் அவர்கள் கால அவகாசம் கேட்டதால், ஜன., 24ம் தேதி இறுதி செய்யப்பட்டது. இப்போது, திடீரென்று முரண்படுகின்றனர்.
இணைப்பு பஸ் குளறுபடி
கோயம்பேடில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. ஆந்திரா மற்றும் பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில் பயணியர் ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் செல்ல முடிவு
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: சாதாரண நாட்களில் 700, வார இறுதி நாட்களில் 1,250, விடுமுறை மற்றும் பண்டிகை மற்றும் நாட்களில் 1,600 பேருந்துளை இயக்கி வருகிறோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் தான் நிற்க முடியும். கோயம்பேடு ஆம்னி நிலையத்தை உடனடியாக காலி செய்யும்படி கூறினால், எங்கு பேருந்துகளை நிறுத்துவது.


