த.வெ.க., தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் உயிரிழந்த பரிதாபம்
த.வெ.க., தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் உயிரிழந்த பரிதாபம்
த.வெ.க., தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் உயிரிழந்த பரிதாபம்



தண்ணீர் பாட்டில் வீசியது சரியா?
கரூர் கூட்டத்தில் விஜய் பேச துவங்கியதும், அவர் பிரசார வாகனத்திற்கு அருகே நின்ற கூட்டத்தினர் மத்தியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், சிலர் மயக்கமடைந்தனர். உடனே அவருக்கு தண்ணீர் கொடுக்குமாறு கூறி, விஜய் தன் பிரசார வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை வழங்கினார்.
மின்தடையும் ஒரு காரணம்?
கரூர் கூட்டத்திற்கு விஜய் வருவதற்கு முன்னரே, வேலுச்சாமிபுரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததும், மரம், கட்டடம் போன்றவற்றின் மீது இளைஞர்கள் பலர் ஏறியதும், அப்பகுதியில் மின் ஒயர்கள் அருகருகே சென்றதால், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதாலும், மின்தடை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 ஆயிரம் பேர் கூடினர்
விஜய் பேசிய வேலுச்சாமிபுரம் பகுதியில், 15 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள், குழந்தைகள், உடல்நல பிரச்னை உள்ளவர்களால், நெரிசலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
சென்னை வந்தடைந்த விஜய்
கரூர் பிரசார கூட்டத்தில், கடும் நெரிசலில் மக்கள் சிக்கியதால், த.வெ.க., தலைவர் விஜய் தன் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டார். காரில் திருச்சி விமான நிலையம் வந்த அவரை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். ஆனால், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து, பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவே அவர் சென்னைவந்தடைந்தார்.
'இதயம் நொறுங்கியது'
கரூர் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருச்சி வந்த விஜய் தனி விமானம் மூலம் நேற்றிரவு 11:15 மணியளவில் சென்னை வந்தார்.
உயிரிழந்தது வேதனை
கரூரில், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
மனம்வருந்துகிறேன்
கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்குகிறது. உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை நினைத்து மனம் வருந்துகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள அவர்களுக்கு மனவலிமை கிடைக்கவும், காயம் அடைந்தோர் விரைவில்குணமடையவும்பிரார்த்திக்கிறேன்.
கவலை அளிக்கிறது
கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்றுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆகியோரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தி உள்ளேன். அருகில் உள்ள திருச்சி மாவட்ட அமைச்சர் அன்பில் மகேஷிடம், போர்க்கால அடிப்படையில், தேவையான உதவியை செய்து தரும்படிஉத்தரவிட்டுள்ளேன்.
தொண்டர்கள் மீது தடியடி
கரூர், வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் விழுந்தனர். மிதிபட்டவர்களும், இறந்தவர்களும், காயமடைந்தவர்களும், மயக்கமடைந்தவர்களும் சாலையில் கிடந்தனர். இவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் பிரசாரம் நடந்த இடமே போர்க்களம் போல் மாறியது.
பறிபோன உயிர்கள்
மருத்துவ குழு விரைவு
விசாரணை நடத்தனும்
சென்னை:'போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், கரூரில் விபத்து நடந்ததா என்பது குறித்து முழு விசாரணை நடத்தி, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
வருத்தம் அளிக்கிறது
தமிழகத்தின் கரூரில் நடந்த ஓர் அரசியல் பேரணியில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இது, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்றும் படி கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை:முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
கலெக்டர்கள் விரைவு
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக கரூர் சென்றனர். சேலத்தில் இருந்த அமைச்சர் சுப்பிரமணியனும், அங்கு விரைந்து சென்றார். நெரிசலில் சிக்கியவர்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகாரிகள் தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் கட்டணமின்றி, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம், 40 பேர் இறந்துள்ளனர். இறப்பு அதிகரிக்காமல் இருக்க தேவையான சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


