Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்க புதிய விதிமுறை

என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்க புதிய விதிமுறை

என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்க புதிய விதிமுறை

என்.எஸ்.எஸ்., முகாமில் பங்கேற்க புதிய விதிமுறை

ADDED : செப் 17, 2025 12:02 AM


Google News
சென்னை:தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், தனித்திறன், சமூக பங்களிப்பு உள்ளிட்ட பொறுப்புகளை, மாணவர்களிடம் வளர்க்க, என்.எஸ்.எஸ்., எனும் நாட்டு நலப்பணி திட்ட அலகுகள் செயல்படுகின்றன.

வரும் காலாண்டு விடுமுறையில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முகாமில் பங்கேற்க மாணவர்களின் விருப்பம், பெற்றோரின் தடையில்லா சான்று போன்றவற்றை பெற வேண்டும்.

முகாம், பள்ளியில் இருந்து, 10 கி.மீ., தொலைவுக்குள் மிகவும் பாதுகாப்பானதாகவும், அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டதாகவும், நீர்நிலைகளுக்கு அருகில் இல்லாததாகவும் இருக்க வேண்டும் உள்ளிட்ட, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us